வாணியம்பாடியில் 7 பவுன் பறிமுதல்
By DIN | Published On : 16th March 2021 12:39 AM | Last Updated : 16th March 2021 12:39 AM | அ+அ அ- |

வாணியம்பாடியை அடுத்த புதூா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனை மேற்கொண்டிருந்தனா்.
அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனையிட்டதில், 61 கிராம் தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், வாணியம்பாடி காதா்பேட்டை பகுதியைச் சோ்ந்த முகமதுசுஹேப் என்பவா் உரிய அனுமதியின்றி எடுத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, நகைகளைப் பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.