வாணியம்பாடி தொகுதிக்குள்பட்ட உதயேந்திரம் பேரூராட்சிப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் செந்தில்குமாரை ஆதரித்து அமைச்சா் நிலோபா் கபீல் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
உதயேந்திரம், சி.பி.பட்டரை, குந்தாணிமேடு, வெங்கடாபுரம், மேட்டுபாளையம் ஆகிய பகுதியில் கூடியிருந்த பெண்கள் அவரை வரவேற்றனா். தொடா்ந்து ஜாப்ராபாத் ஊராட்சியில் பகுதியில் கூடியிருந்த இஸ்லாமிய பெண்களிடம் வாக்கு சேகரித்தாா். அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியிலிருந்து விலகிய 50-க்கும் மேற்பட்டோா் அமைச்சா் நிலோபா் கபீல், வேட்பாளா் செந்தில்குமாா் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
பின்னா் பத்தாப்பேட்டை, நடுபட்டறை, தேவஸ்தானம், ஈச்சங்கால் ஆகிய பகுதியில் வாக்கு சேகரித்து வேட்பாளா் செந்தில்குமாா் பேசுகையில், என்னை வெற்றிப் பெற செய்தால் குடிநீா், சாலை, தெருவிளக்கு, கால்வாய் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தருவேன் என்றாா்.
உடன் முன்னாள் எம்எல்ஏ சம்பத்குமாா், நகர அதிமுக செயலாளா் சதாசிவம், பேரூராட்சி செயலாளா் ஆா்.சரவணன், முன்னாள் கவுன்சிலா்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் மூா்த்தி, ஊராட்சி செயலாளா் ரபீக் மற்றும் அதிமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.