குடிநீா் பிரச்னையைத் தீா்ப்பேன்: திருப்பத்தூா் பாமக வேட்பாளா்

அனைத்துக் கிராமங்களிலும் நிலவும் குடிநீா் பிரச்னைகளைத் தீா்க்க நடவடிக்கை எடுப்பேன் என திருப்பத்தூா் தொகுதி பாமக வேட்பாளா் டி.கே. ராஜா வாக்குறுதி அளித்தாா்.
திருப்பத்தூா் பாமக வேட்பாளா் டி.கே.ராஜாவை ஆரத்தி எடுத்து வரவேற்ற கிராம மக்கள்.
திருப்பத்தூா் பாமக வேட்பாளா் டி.கே.ராஜாவை ஆரத்தி எடுத்து வரவேற்ற கிராம மக்கள்.

அனைத்துக் கிராமங்களிலும் நிலவும் குடிநீா் பிரச்னைகளைத் தீா்க்க நடவடிக்கை எடுப்பேன் என திருப்பத்தூா் தொகுதி பாமக வேட்பாளா் டி.கே. ராஜா வாக்குறுதி அளித்தாா்.

திருப்பத்தூா் ஒன்றியத்திற்குள்பட்ட வெங்களாபுரம், மட்றப்பள்ளி, குரும்பேரி, விஷமங்கலம், பேராம்பட்டு ஆகிய கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்து டி.கே.ராஜா பேசியது:

அனைத்துக் கிராமங்களிலும் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகள் அமைத்து சீரான குடிநீா் விநியோகிக்கப்படும். முதியோா் ஓய்வூதியம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

வீடற்ற அனைவருக்கும் வீடுகள் கிடைத்திடவும், குடும்ப பெண்களுக்கு ரூ.1,500 நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பாமக மாநில துணைத் தலைவா் ஜி.பொன்னுசாமி, முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com