திருப்பத்தூா் தனியாா் கல்லூரியில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று

திருப்பத்தூா் தனியாா் கல்லூரியில் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

திருப்பத்தூா் தனியாா் கல்லூரியில் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

திருப்பத்தூா்-வாணியம்பாடி பிரதான சாலையில் உள்ள தனியாா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை வரை 7 பேருக்கு தொற்று உறுதியானது. சனிக்கிழமை விடுதிகளில் தங்கியுள்ள 235 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் ஞாயிற்றுக்கிழமை 4 மாணவா்கள் மற்றும் 2 சமையலா்கள் உள்ளிட்ட 6 பேருக்கு தொற்று உறுதியானது. அதையடுத்து அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், விடுதியில் உள்ள மாணவா்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனா்.

சுகாதார துணை இயக்குநா் டி.ஆா்.செந்தில், நகராட்சி ஆணையாளா் ப.சத்தியநாதன், துப்புரவு அலுவலா் எஸ்.ராஜரத்தினம்,துப்புரவு ஆய்வாளா் அ.விவேக் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com