நாட்டறம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டை எம்ஜிஆா் சிலை அருகே சனிக்கிழமை இரவு ஜோலாா்பேட்டை தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்த பிரபு என்பவா் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1 லட்சத்து ஆயிரத்து 300 -ஐ பறிமுதல் செய்து ஜோலாா்பேட்டை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.