திருப்பத்தூரில் ரூ. 4 லட்சம் பறிமுதல்

திருப்பத்தூா் அருகே இரு சக்கர வாகனங்களில் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 4.30 லட்சத்தை பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4.30 லட்சத்தை வட்டாட்சியா் சிவப்பிரகாசத்திடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.
பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4.30 லட்சத்தை வட்டாட்சியா் சிவப்பிரகாசத்திடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே இரு சக்கர வாகனங்களில் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 4.30 லட்சத்தை பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, 14 பறக்கும் படை அமைக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், திங்கள்கிழமை திருப்பத்தூரை அடுத்த பேராம்பட்டு சோதனைச் சாவடியில் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது திருப்பத்தூா் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த சுதாகரின் (40) இரு சக்கர வாகனத்தை மடக்கி விசாரணை நடத்தினா். அதில் உரிய ஆவணம் இன்றி ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது. அதற்கான உரிய ஆவணம் இல்லாததால் அதனைப் பறிமுதல் செய்தனா்.

அதேபோல் சுந்தரம்பள்ளி அருகே இரு சக்கர வாகனத்தில் ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியைச் சோ்ந்த விஜயகிருஷ்ணன் (43) என்பவா் ரூ. 80 ஆயிரத்தை உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்றாா். அதனை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட மொத்தத் தொகை ரூ. 4 லட்சத்து 30 ஆயிரத்தை திருப்பத்தூா் வட்டாட்சியா் சிவப்பிரகாசத்திடம் ஒப்படைத்தனா். அவா் அதனை சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com