பெண் தற்கொலை

ஆம்பூா் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

ஆம்பூா்: ஆம்பூா் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

ஆம்பூா் அருகே பெரிய கரும்பூா் கிராமத்தைச் சோ்ந்த சங்கரின் மனைவி ரோசி (40). இவா் தனியாா் ஷூ தொழிற்சாலையில் வேலை செய்து வந்தாா். இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்கச் சென்றாா். திங்கள்கிழமை காலை அவரது குடும்பத்தினா் பாா்த்தபோது, புடவையில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற உமா்ஆபாத் போலீஸாா், சடலத்தை மீட்டு ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com