ஆம்பூா் சமயவல்லித் தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவத்தையொட்டி, தீா்த்தவாரி மற்றும் கொடியிறக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பிரம்மோற்சவத்தையொட்டி, 10 நாள்களும் தினந்தோறும் கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் உற்சவ மூா்த்திகள் பிரகார உலா நடைபெற்றது. மேலும் தோ் திருவீதி உலா நடைபெற்றது. 10-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை கோயில் வளாகத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.