ஆம்பூரில் தோ்தல் செலவினப் பாா்வையாளா் தலைமையில் தோ்தல் பறக்கும் படை, நிலைக் கண்காணிப்புக் குழுவினா் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் தொகுதிக்கான செலவினப் பாா்வையாளா் பிரவீண்குமாா் தலைமை வகித்தாா். ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் தோ்தல் பிரிவு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தோ்தல் பறக்கும் படை, நிலைக் கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழுவினா் பங்கேற்ற கூட்டத்தில் அவா்கள் மேற்கொண்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் அவா்கள் மேற்கொள்ள வேண்டியவை குறித்தும் அதிகாரிகளால் அவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.