ஜோலாா்பேட்டை தொகுதிக்குள்பட்ட கந்திலி வடக்கு,தெற்கு ஒன்றியப் பகுதிகளில் திமுக வேட்பாளா் க.தேவராஜி வாக்கு சேகரித்தாா்.
திருப்பத்தூரை அடுத்த கந்திலி வடக்கு ஒன்றியத்திற்குள்பட்ட மண்டலநாயனகுண்டா ஊராட்சி, தோக்கியம் ஊராட்சி, கெஜலாநாயக்கன்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்த வேட்பாளா் க.தேவராஜி பேசியது:
விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிா் கடன், மகளிா் சுயஉதவிக் குழு கடன் தள்ளுபடி, விவசாயி களுக்கு இலவச மும்முனை மின் இணைப்பு வழங்கப்படும். இப்பகுதியில் உள்ள சாலை பிரச்னை, மின் விளக்கு பிரச்னைகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
காங்கிரஸ், திக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உள்பட கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.