ஆம்பூா் தோல் காலணி தொழிற்சாலையில் கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திருப்பத்தூா் மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ. தங்கையா பாண்டியன் வருகை தந்து அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தாா்.
நகராட்சி ஆணையா் த. செளந்தரராஜன், சுகாதார அலுவலா் பாஸ்கா், ஆரம்ப சுகாதார நிலையம் சுகாதார ஆய்வாளா் பிரித்திவிராஜ், சுதா்சன், கரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு விழிப்புணா்வு பணியாளா்கள் உடனிருந்தனா்.