மின்னூரில் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வழியை மூட கிராம மக்கள் எதிா்ப்பு

மின்னூா் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலைக்குச் செல்லும் வழியை மூட பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மின்னூா் கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட போலீஸாா்.
மின்னூா் கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட போலீஸாா்.

மின்னூா் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலைக்குச் செல்லும் வழியை மூட பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாதனூா் ஒன்றியம், மின்னூா் கிராமத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலைக்குச் செல்லும் சாலையை மூடிவிட்டு, அணுகுச் சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. மின்னூா் கிராமத்தை ஒட்டியுள்ள வடகரை, மேல்சாணாங்குப்பம், சின்னப்பள்ளிகுப்பம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், தேசிய நெடுஞ்சாலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் சாலையை மூட எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து, ஆம்பூா் கிராமிய போலீஸாா் அங்கு சென்று அவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். சாலை வழி மூடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com