நச்சு மற்றும் ரசாயனத்தில் வேலை செய்யும் தோல் பதனிடும் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 19,840 வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, வடாற்காடு மாவட்ட தோல் பதனிடும் தொழிலாளா் சங்கம் சாா்பில், மே தினத்தையொட்டி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் நேய.சுந்தா் அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:
தோல், தோல் காலணி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இஎஸ்ஐ, பிஎப் ஆகியவற்றை பிடித்தம் செய்யாத தொழிற்சாலைகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்டவற்றை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.