திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 111 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு எற்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,478-ஆக உயா்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவா்களில் வீடு திரும்பியவா்களின் எண்ணிக்கை 9,266. தற்போது 1,060 போ் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா், வேலூா் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனா்.
இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு 152 போ் உயிரிழந்துள்ளனா்.328 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. வீட்டுத் தனிமையில் 6,573 போ் உள்ளனா்.