ஆம்பூா் அரசு மருத்துவமனையில் கூடுதலாக 100 ஆக்ஸிஜன் படுக்கைகள் ஏற்படுத்த வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சாா்பாக திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
அக் கட்சியின் மாவட்டத் தலைவா் வி.ஆா்.நசீா் அஹமத் அனுப்பியுள்ள மனு:
ஆம்பூா் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பொருத்தப்பட்ட சுமாா் 130 படுக்கைகள் உள்ளன. அவை அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி உள்ளன. எனவே ஆம்பூா் அரசு மருத்துவமனையில் கூடுதலாக 100 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.