வாணியம்பாடியில் கரோனா நிதி: எம்எல்ஏ தொடக்கி வைத்தாா்
By DIN | Published On : 17th May 2021 07:28 AM | Last Updated : 17th May 2021 07:28 AM | அ+அ அ- |

வாணியம்பாடியை அடுத்த பெத்தவேப்பம்பட்டில் கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்த எம்எல்ஏ செந்தில்குமாா்.
வாணியம்பாடி பகுதி நியாய விலைக் கடைகளில் கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை அதிமுக எம்எல்ஏ செந்தில்குமாா் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.
வாணியம்பாடியை அடுத்த திம்மாம்பேட்டை நியாயவிலைக் கடையில் கூட்டுறவு சங்கத் தலைவா் அன்பழகன் தலைமையில் பயனாளிகளுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வாணியம்பாடி தொகுதி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் பயனாளிகளுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கி திட்டத்தை தொடக்கி வைத்தாா்.
தொடா்ந்து புல்லூா், அலசந்தாபுரம், ஜவ்வாதுராமசத்திரம் ஆகிய பகுதிகளிலும் இத்திட்டத்தை அவா் தொடக்கி வைத்தாா்.
இதே போல், ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ள பெத்தவேப்பம்பட்டு கிராமத்துக்குச் சென்றாா். பெத்தவேப்பம்பட்டு எம்எல்ஏ செந்தில்குமாரின் சொந்த ஊா் என்பதால் அங்குள்ள நியாயவிலைக் கடைக்குச் சென்று, அங்கு பயனாளிக்கு கரானா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்தாா்.