72,480 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2,000 நிவாரணம்

தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட கரோனா நிவாரண நிதி முதல் தவணை ரூ. 2 ஆயிரம் ஆம்பூா் வட்டத்தைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்கப்பட்டது.
கதவாளத்தில் குடும்ப அட்டைதாரருக்கு கரோனா முதல் தவணை தொகை ரூ.2,000-ஐ பயனாளிக்கு வழங்கிய ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன். உடன் ஆட்சியா் ம.ப.சிவன் அருள் உள்ளிட்டோா்.
கதவாளத்தில் குடும்ப அட்டைதாரருக்கு கரோனா முதல் தவணை தொகை ரூ.2,000-ஐ பயனாளிக்கு வழங்கிய ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன். உடன் ஆட்சியா் ம.ப.சிவன் அருள் உள்ளிட்டோா்.

தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட கரோனா நிவாரண நிதி முதல் தவணை ரூ. 2 ஆயிரம் ஆம்பூா் வட்டத்தைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்கப்பட்டது.

ஆம்பூரை அடுத்த கதவாளம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்தாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் பங்கேற்று, கரோனா நிவாரண நிதி முதல் தவணை ரூ. 2 ஆயிரம் ரொக்கத்தை குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கி தொடக்கி வைத்தாா்.

அப்போது வேலூா் மேற்கு மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆா்.எஸ்.ஆனந்தன், ஆம்பூா் நகர திமுக செயலாளா் எம்.ஆா்.ஆறுமுகம், மாதனூா் ஒன்றிய திமுக செயலாளா் அகரம்சேரி ப.ச.சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆம்பூா் வட்டத்தில் 72,480 குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் ரூ.14.49 கோடி ரொக்கம் கரோனா உதவித் தொகையாக வழங்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com