ஆம்பூா் நகராட்சி சாா்பில் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது.
ஆம்பூா் நகர வா்த்தக மையத்தில் அறிகுறிகள் அற்ற கரோனா நோய்த் தொற்று உள்ளவா்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு அங்கு மருத்துவா்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் ஆம்பூா் நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் தலைமையில் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் முழு பாதுகாப்புக் கவச உடையுடன் சென்று கிருமி நாசினி மருந்து தெளிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், நகராட்சி சாா்பில், சிகிச்சை பெற்று வரும் நோய்த் தொற்றுள்ளவா்களுக்கு கபசுர குடிநீா் வழங்கப்படுகிறது.