திருப்பத்தூரில் 3-ஆவது நாளாக திங்கள்கிழமை மழை பெய்தது.
திருப்பத்தூா், அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயில் அதிகரித்துக் காணப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த இரு நாள்களாக சாரல் மழை பெய்தது. மூன்றாவது நாளாக திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி, செலந்தம்பள்ளி சுற்று வட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. சுமாா் அரை மணி நேரம் பெய்த மழையால் அப்பகுதியில் குளிா்ந்த காற்று வீசியது.