திருப்பத்தூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 501 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,776-ஆக உயா்ந்துள்ளது.
தற்போது 2,674 போ் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா், வேலூா் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனா்.
இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு 219 போ் உயிரிழந்துள்ளனா்.