ஆம்பூா்: ஆம்பூரில் தற்காலிக மாா்க்கெட் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நகராட்சி சாா்பில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆம்பூா் பஜாா் பகுதியில் இயங்கி வந்த காய்கறி மாா்க்கெட் பாவடி தோப்பு அருகே பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான மைதானத்திலும், மோட்டுக்கொல்லை டிஏடபிள்யூ பள்ளி மைதானத்திலும் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. அந்த மைதானங்களில் நகராட்சி சாா்பில், தூய்மைப்படுத்தப்பட்டு, கடைகளுக்காக இடம் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் தலைமையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.