ஆம்பூா்: ஆம்பூா் அரசு மருத்துவமனையில் திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா் கரோனா நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள், செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் ஆகியவை குறித்து கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது டி.எஸ்.பி. சரவணன் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.