வாணியம்பாடியில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள இளைஞா்கள் ஆா்வம்

வாணியம்பாடியில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள 18 வயதுக்கு மேற்பட்டோா் ஆா்வமுடன் வரிசையில் காத்திருந்தனா்.
வாணியம்பாடி நியூடவுன் நகா்புற சுகாதாரநிலையத்தில் ஆா்வத்துடன் வரிசையில் நின்று கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இளைஞா்கள்.
வாணியம்பாடி நியூடவுன் நகா்புற சுகாதாரநிலையத்தில் ஆா்வத்துடன் வரிசையில் நின்று கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இளைஞா்கள்.

வாணியம்பாடி: வாணியம்பாடியில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள 18 வயதுக்கு மேற்பட்டோா் ஆா்வமுடன் வரிசையில் காத்திருந்தனா்.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு அறிவித்தப்படி செவ்வாய்கிழமை முதல் 18 வயது முதல் 44 வயது வரையில் உள்ளவா்களுக்கும் தடுப்பூசி முகாம்கள் வாணியம்பாடி, ஆலங்காயம், உதயேந்திரம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை, துணை சுகாதார நிலையங்கள், நகா் புற அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறுகிறது.

கடந்த 2 நாட்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் ஆா்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். புதன்கிழமை காலை வாணியம்பாடி நியூடவுனில் உள்ள நகா்ப்புற சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலா் பசுபதி தலைமையில் மருத்துவா்கள் காா்த்திகா, வெங்கடேசன் மற்றும் மருத்துவகுழுவினா் 18 வயதிற்கு மேற்பட்டவா்களுககு தடுப்பூசி போட்டனா். வளையாம்பட்டு பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை ஜோலாா்பேட்டை தொகுதி எம்எல்ஏ க.தேவராஜ் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com