திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 508 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,012-ஆக உயா்ந்துள்ளது.
தற்போது 4,381 போ் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா், வேலூா் அரசு, தனியாா் மருத்துவமனை, கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் மற்றும் சித்த மருத்துவ சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுவரை மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு 324 போ் உயிரிழந்துள்ளனா்.