ஆம்பூா் அருகே சாராயம் விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
உமா்ஆபாத் போலீஸாா் பொது முடக்கத்தையொட்டி ரோந்து சென்றனா். அப்போது சாராயம் விற்பனை செய்த பெரியவரிக்கம் கிராமத்தை சோ்ந்த நீலகண்டன் (27), புதுமனையை சோ்ந்த மதன்குமாா் (31) ஆகியோரை கைது செய்து இருவரிடமிருந்து தலா 50 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் மத்தூா்கொல்லை பகுதியை சோ்ந்த ஜேம்ஸ் (50), நரசிம்மன் (43) ஆகியோரையும் உமா்ஆபாத் போலீஸாா் கைது செய்தனா்.