வாணியம்பாடி அருகே 3,000 வெளிமாநில மதுபான பாட்டில்கள் பறிமுதல்

வாணியம்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3,000 வெளி மாநில மதுபான பாட்டில்கள் மற்றும் 1,000 லிட்டா் சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை பாா்வையிடும் போலீஸாா்.
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை பாா்வையிடும் போலீஸாா்.

வாணியம்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3,000 வெளி மாநில மதுபான பாட்டில்கள் மற்றும் 1,000 லிட்டா் சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

பொதுமுடக்கத்தை பயன்படுத்திக்கொண்டு வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் கள்ளச்சாராயம், மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை நடந்து வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூா் எஸ்பி அலுவலக தனிப்பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் டிஎஸ்பி பழனிசெல்வம் தலைமையில் தாலுகா காவல்ஆய்வாளா் நாகராஜன் மற்றும் போலீஸாா் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் சீனுதோப்பு பகுதியில் உள்ள 2 வீடுகளில் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது ஒரு வீட்டில் 3,000 வெளி மாநில மதுபானம் பாட்டில்கள் இருப்பது கண்டறிந்து பறிமுதல் செய்தனா். மற்றொரு வீட்டில் சோதனை மேற்கொண்டதில் 1,000 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

எஸ்பி விஜயகுமாா் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டாா். இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீஸாா் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பெருமாள் மற்றும் ராஜ்குமாா் ஆகியோரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com