திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை கனமழை ஒரு மணி நேரம் பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது.
திருப்பத்தூரில் கடந்த இரு நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சுமாா் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.