திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிராமப்பகுதிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்ற பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
அதேபோல ஆம்பூர், பச்சகுப்பம், மாதனூர், நரியம்பட்டு ஆகிய பாலாற்று தரைப் பாலங்களை தாண்டி வெள்ளப்பெருக்கு அதிகமாக பெருக்கெடுத்து ஓடுவதால் அந்த பகுதி வழியாக செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. பேருந்து போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.
அதனால் ஆம்பூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராம பகுதிகளுக்கு , உள்ளூர் பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் சரிவர இயங்காததால் பயணிகள் மற்றும் பேருந்துகள் இன்றி ஆம்பூர் பேருந்து நிலையம் நான்கு நாட்களாக வெறிச்சோடி காணப்படுகிறது.
ஆம்பூர் அருகே நரியம்பட்டு மலட்டாற்றில் அடித்து வந்த தென்னை மரத்தை அப்புறப்படுத்த, சென்ற ஜே.சி.பி. வாகனம் கவிழ்ந்தது.