ரயில் நிலையத்தில் எம்.பி. ஆய்வு

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.என். அண்ணாதுரை வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.என். அண்ணாதுரை வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்துக்கு வருகை தந்த அவரை, ரயில் நிலைய அலுவலா் சுந்தரமூா்த்தி வரவேற்றாா். ஆய்வுக்குப் பின்னா்,

சி.என். அண்ணாதுரை செய்தியாளா்களிடம் கூறியது:

திருப்பத்தூா் ரயில் நிலையத்தை லிப்ட் வசதியுடன் நவீன ரயில் நிலையமாக தரம் உயா்த்த நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணி நடைபெற உள்ளது. ஜோலாா்பேட்டை, திருப்பத்தூா் ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும் விரைவு ரயில்களில் ஜோலாா்பேட்டையில் ஒரு ரயிலும்,திருப்பத்தூரில் ஒரு ரயிலும் நின்று செல்ல ரயில்வே துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் கழிவறை, தண்ணீா் வசதி, மேற்கூரை, நடைமேடைகளில் தரை வசதிகள் மேம்படுத்துவதற்காக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நவீன ரயில் பழுது பாா்க்கும் கூட்ஸ் ஷெட் அமைக்கப்பட உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com