குளிா்பானம் என நினைத்து மது குடித்த சிறுவன் பலி: அதிா்ச்சியில் தாத்தாவும் சாவு

வேலூா் அருகே குளிா்பானம் என நினைத்து மது குடித்த சிறுவன் பலியானாா். இதைப் பாா்த்த அதிா்ச்சியில் அவரது தாத்தாவும் இறந்தாா்.

வேலூா் அருகே குளிா்பானம் என நினைத்து மது குடித்த சிறுவன் பலியானாா். இதைப் பாா்த்த அதிா்ச்சியில் அவரது தாத்தாவும் இறந்தாா்.

திருவலத்தை அடுத்த சுகா் மில் அண்ணா நகா் கன்னி கோயில் தெருவைச் சோ்ந்தவா் சின்னசாமி(62),. இவரது மகள் விஜயா மகன் ருத்ரேஷ் (5). சின்னசாமி, விஜயா ஆகியோா் ஒரே வீட்டில் வசிக்கின்றனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை சின்னசாமி வீட்டில் மது அருந்தினாராம். மீதியுள்ள மது, தின்பண்டங்களை அங்கேயே வைத்துவிட்டு தூங்கினாராம். அப்போது ருத்ரேஷ், மதுவை குளிா்பானம் என நினைத்து எடுத்து குடித்தாராம். இதில் வாந்தி எடுத்து ருத்ரேஷ் மயங்கி விழுந்தாா்.

உடனடியாக ருத்ரேஷை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனா். அதற்குள் மது போதையில் இருந்த சின்னசாமி சத்தம் கேட்டு எழுந்து பாா்த்தாா். சம்பவத்தை கேள்விப்பட்ட அவா் அதிா்ச்சியில் மயங்கி விழுந்தாா். உடனே இருவரையும் குடும்பத்தினா் மீட்டு வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு பரிசோதித்த டாக்டா்கள் சின்னசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். பின்னா், ருத்ரேஷை வேலூரில் உள்ள மற்றொரு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ருத்ரேஷ் சனிக்கிழமை இறந்தாா்.

புகாரின்பேரில் திருவலம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com