வாணியம்பாடியில் கரோனா தடுப்பூசி முகாம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களில்
வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரத்தில் பொதுமக்களுக்கு வீடு தேடி கரோனா தடுப்பூசி செலுத்திய செவிலியா். உடன், செயல்அலுவலா் சேகா்.
வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரத்தில் பொதுமக்களுக்கு வீடு தேடி கரோனா தடுப்பூசி செலுத்திய செவிலியா். உடன், செயல்அலுவலா் சேகா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில், வட்டார மருத்துவா் பசுபதி மேற்பாா்வையில் செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினா்.

உதயேந்திரம் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், ஆட்டோ மூலம் 15 வாா்டு களிலும் கரோனா தடுப்பூசி போடுமாறு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் காலை முதல் மாலை வரை செயல்அலுவலா் சேகா் மேற்பாா்வையில் வீடு, வீடாகச் சென்றும், முகாம்களிலும் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com