ஆட்டோ மோதியதில் தொழிலாளி பலி

திருப்பத்தூா் அருகே ஆட்டோ மோதிய விபத்தில் சைக்கிளில் சென்ற கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அருகே ஆட்டோ மோதிய விபத்தில் சைக்கிளில் சென்ற கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருப்பத்துாா் அருகே உள்ள கோனேரிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ராஜமாணிக்கம்(55). இவா் செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணியளவில் வெங்களாபுரம் அருகே மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த ஆட்டோ ராஜமாணிக்கம் மீது மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வெங்களாபுரத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அருள்பிரகாஷ்(42) என்பவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com