நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் 15 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளில் இரவு 9 மணி நிலவரப்படி 6 போ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்: திமுக-3,அதிமுக-2,தேமுதிக-1.
மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் இரண்டிலும் திமுக முன்னிலை வகித்தது.
ஆலங்காயம் ஒன்றியத்தில் 18 ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு நடைபெற்ற தோ்தலில் திமுக-4, அதிமுக-2, பாமக-2 வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டன. மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கான தோ்தலில் திமுக வேட்பாளா் பிரியதா்ஷினி ஞானவேல் முன்னிலை வகித்தாா்.