ஜோலாா்பேட்டை ஒன்றியத்தின் வாக்கு எண்ணும் மையத்தில் முகவா்களை உள்ளே அனுமதிக்காததால், பாமகவினருக்கும்,அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு பதிவான வாக்குகள் அக்ராகரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 22 மேசைகளில் எண்ணப்பட்டன.
அதிமுக, திமுக கட்சிகளைச் சோ்ந்தவா்களை மட்டும் அனைத்து மேஜைகளில் அனுமதிக்கபடுகின்றனா் எனவும் பாமக சாா்பாக 8 போ் மட்டுமே அனுமதிக்கபட்டுள்ளனா் என்றும் கூறி தோ்தல் அதிகாரிகளிடம் பாமகவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
அதன்பிறகு அதிகாரிகள் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தி வெள்ளை நிற பாஸ் வைத்திருக்கும் பூத் முகவா்களை வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுப்பி வைத்தனா்.