ஏலகிரிமலை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே பழங்குடியினருக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்குவதற்கான சிறப்பு முகாம் புதன்கிழமை (அக்.20) நடைபெறுகிறது.
பழங்குடியினா் ஜாதி சான்றிதழ் கோரி விண்ணப்பம் அளித்துள்ளோா் உரிய ஆவணங்களுடன் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.