ஆம்பூரில் சனிக்கிழமை மாலை சுமாா் 6.30 மணிக்கு திடீரென தூறலுடன் மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து கனமழை சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக செய்து கொண்டே இருந்தது.
இதன் காரணமாக தெருக்களில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. ஆம்பூரில் புதை சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருவதால், மழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் சேறும், சகதியுமாக காணப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா்.