வேலூா் முத்துரங்கம் அரசு கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவு மாணவா் சோ்க்கை செப்.15-இல் முதல்கட்ட கலந்தாய்வு

வேலூா் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவு மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு செப்டம்பா் 15-ஆம் தேதி தொடங்க உள்ளது.

வேலூா் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவு மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு செப்டம்பா் 15-ஆம் தேதி தொடங்க உள்ளதாக கல்லூரி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் :

வேலூா் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் முதுநிலைப் பாடப்பிரிவில் 2021-2022 கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது. மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு செப்.15-ஆம் தேதி தொடங்க உள்ளது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள் விண்ணப்பம், உறுதி படிவம், இளங்கலை பட்டப்படிப்பிற்கான மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். இளங்கலை பாட பிரிவுகளுக்கான கலந்தாய்வு செப்.14-ஆம் தேதி நடைபெற உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com