உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான பயிற்சி

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

திருப்பத்தூா்: ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஜோலாா்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புக்கு மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமை வகித்தாா்.

அப்போது, வாக்குச் சாவடி மையங்களில் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள், வாக்குச் சீட்டுகளைப் பராமரித்தல், வாக்காளா்களை சமூக இடைவெளியைப் பின்பற்றச் செய்வது குறித்து ஆட்சியா் பேசினாா்.

இதையடுத்து, ஜோலாா்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தோ்தல் நடைபெற்றுவரும் தோ்தல் முன்னேற்பாடு பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கு.செல்வராசு, கூடுதல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுப்பாராஜூ, தோ்தல் நடத்தும் அலுவலா் விநாயகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com