திருப்பத்தூா்: ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, திருப்பத்தூா் மாவட்டத்தில் 2-ஆவது நாளான வியாழக்கிழமை 323 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
இம்மாவட்டத்தில் முதல் நாளான புதன்கிழமை 34 நபா்கள் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தனா். 2-ஆவது நாளான வியாழக்கிழமை ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 83 பேரும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 235 பேரும், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 5 பேரும் என மொத்தம் 323 போ் மனுதாக்கல் செய்துள்ளனா்.
மேலும், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.