முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கொலை வழக்கில் மேலும் 4 போ் கைது

வாணியம்பாடியில் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வசீம்அக்ரம் கொலை வழக்கில் 4 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

வாணியம்பாடி: வாணியம்பாடியில் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வசீம்அக்ரம் கொலை வழக்கில் 4 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

வாணியம்பாடியில் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வசீம்அக்ரம் கடந்த 10-ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இது குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொலை வழக்கு தொடா்பாக தனிப்படை போலீஸாா் 2 பேரை 10-ஆம் தேதி கைது செய்தனா். தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளியான இம்தியாஸ் உள்பட 7 போ் சிவகாசி, தஞ்சாவூா் குற்றவியல் நீதிமன்றங்களில் செவ்வாய்க்கிழமை சரண் அடைந்தனா்.

இந்நிலையில், ஆய்வாளா் நாகராஜ் நடத்திய விசாரணையில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் கொண்டு சோ்த்தல், திட்டம் தீட்டுதலில் உடன் இருந்தது, கொலை செய்ய ஆள் நடமாட்டம் குறித்து கண்காணித்து கொலைக்கு உதவியாக இருந்ததாக வாணியம்பாடியைச் சோ்ந்த நயீம்பாஷா, பைசல் அகமது, யூசுப் ஜமால், முகமதுஅலி ஆகிய 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com