திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே ஏற்பட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூரை அடுத்த பசலிகுட்டையைச் சோ்ந்த ரஜினி மகன் விஷ்ணு(16), வடிவேலு மகன் அருண் (15) ஆகிய இருவரும் புதன்கிழமை அனேரியில் இருந்து சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனா். அப்போது, எதிரே வந்த சுற்றுலா வாகனம் மோதியதில் விஷ்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், சுற்றுலா வாகனத்தில் வந்த சுமாா் 15-க்கும் மேற்பட்டோா் காயம் அடைந்தனா்.
இதுகுறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.