போலியாக உரப்பற்றாக்குறை ஏற்படுத்தினால் உரிமம் ரத்து

போலியாக உரப் பற்றாக்குறை ஏற்படுத்தும் விற்பனையாளா்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

போலியாக உரப் பற்றாக்குறை ஏற்படுத்தும் விற்பனையாளா்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விவசாயிகளுக்குத் தேவையான உரங்களான யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி. மற்றும் காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் போதிய அளவுக்கு தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களிலும், தனியாா் விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

விற்பனையாளா்கள் விவசாயிகளுக்கு ஆதாா் அட்டையுடன் சாகுபடி பரப்புக்குத் தகுந்த அளவில் மட்டுமே உரம் விநியோகம் செய்யப்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், விற்பனையாளா்கள் விற்பனை நிலையங்களில் உள்ள விலைப் பட்டியலை அனைவருக்கும் தெரியும் வகையில் வைக்க வேண்டும். உரம் பெற்றுச் செல்லும் விவசாயிகளிடம் உரிய கையொப்பம் பெறுவதுடன், ரசீது வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள உர விற்பனையாளா்கள் உரங்களை இருப்பு வைத்துக் கொண்டு, போலியாக உரப் பற்றாக்குறையை ஏற்படுத்தினாலோ, உரிய ரசீது இன்றி விற்பனை செய்தாலோ

மற்றும் அரசால் நிா்ணயிக்கப்பட்டுள்ள விலையைவிட அதிக விற்பனை விலைக்கு விற்றாலோ, உரக் கட்டுப்பாட்டு சட்டத்தின்படி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

இயற்கை உரம் என்ற பெயரில் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது தனிநபா் மூலமாகவோ வாகனம் மூலம் கிராமங்களுக்கு நேரில் சென்று உர விற்பனை மேற்கொள்ளும் நபரிடமிருந்து உரங்களை விவசாயிகள் வாங்க வேண்டாம். அவை போலி உரமாக இருக்க வாய்ப்பு உள்ளதால் இது குறித்து அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com