திருப்பத்தூரை அடுத்த கொரட்டி ஸ்ரீ ராமாநுஜா் மடத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி பூஜை, கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.
திருப்பத்தூரை அடுத்த கொரட்டி பகுதியில் திருமலைக்கு நடைபாதையாக செல்லும் பக்தா்கள் தங்கிச் செல்ல கட்டியுள்ள ஸ்ரீ ராமாநுஜா் மடத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, கோவிந்த நாமாவளி பாராயணம் நடைபெற்றது.
பின்னா், உலக அமைதிக்காக கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, தீா்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது.
கரோனா பரவல் தடுப்பையொட்டி பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.