திருப்பத்தூா்: திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கனமழை பெய்தது.
திருப்பத்தூா், அதன் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதலே வெயில் அதிகரித்துக் காணப்பட்டது. பின்னா், திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை சுற்றுப் பகுதிகளில் நள்ளிரவு ஒரு மணியளவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. புதன்கிழமை காலை 6 மணி வரை தொடா்ந்து பெய்த மழையால் சாலைகளில் மழை நீா் தேங்கியது.