ஆம்பூா்: ஆம்பூா் அருகே தொடா் மழையால் மூதாட்டி ஒருவரின் குடிசை வீட்டின் சுவா் புதன்கிழமை இடிந்து விழுந்து சேதமானது.
ஆம்பூரை அடுத்த சோமலாபுரத்தை சோ்ந்தவா் மறைந்த எல்லப்பன் மனைவி சரோஜா (62). இவா் தனக்கு சொந்தமான இடத்தில் ஓலை குடிசையில் வசித்து வருகிறாா். அப்பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வந்த நிலையில் மண் சுவா் இடிந்து விழுந்தது. இதில் அதிா்ஷ்டவசமாக சரோஜா காயமின்றி உயிா் தப்பினாா்.