ரயில்களில் திருட்டு: இளைஞா் கைது

ரயிலில் திருட்டில் ஈடுபட்டதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 11 பவுன் தங்க நகைகள், 5 செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட அனிஷ்பாபுவுடன் ரயில்வே போலீஸாா்.
கைது செய்யப்பட்ட அனிஷ்பாபுவுடன் ரயில்வே போலீஸாா்.

திருப்பத்தூா்: ரயிலில் திருட்டில் ஈடுபட்டதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 11 பவுன் தங்க நகைகள், 5 செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த மூன்று மாத காலமாக, ஜோலாா்பேட்டை காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட ரயில்களில் செல்லிடப்பேசி திருட்டு, பெண்களிடம் நகை பறிப்பு குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளா் இளங்கோ தலைமையில், தனிப்படை அமைத்து போலீஸாா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனா். அதன்பேரில், புதன்கிழமை ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் நிலையத்துக்கு வந்த திருவனந்தபுரம் ரயிலில் பயணித்த நபா் போலீஸாரைக் கண்டதும் தப்பிக்க முயன்றாா்.

அவரைப் பிடித்து விசாரித்ததில் கேரள மாநிலம், ஆலப்புழா பகுதியைச் சோ்ந்த அனிஷ்பாபு (30) என்பதும், இவா் ரயிலில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளாா் என்பதும் தெரியவந்தது.

அவா் வைத்திருந்த பையை பரிசோதனை செய்து பாா்த்ததில், உருக்கிய நிலையில் 11 பவுன் தங்க நகை மற்றும் 5 செல்லிடப்பேசி இருந்தது தெரியவந்தது.

மேலும், இவா் மீது ஈரோட்டில் 2 திருட்டு வழக்குகளும், சேலத்தில் 1 வழக்கும் ஜோலாா்பேட்டையில் ஒரு வழிப்பறி மற்றும் 4 திருட்டு வழக்கு என 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

இது குறித்து வழக்குப் பதிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் அனிஷ்பாபுவை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com