வாணியம்பாடியில் வனச்சரக அலுவலகம் திறப்பு

வாணியம்பாடியில் வனச்சரக அலுவலகம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
தெக்குப்பட்டில் திறக்கப்பட்டுள்ள வாணியம்பாடி வனச்சரக அலுவலகம்.
தெக்குப்பட்டில் திறக்கப்பட்டுள்ள வாணியம்பாடி வனச்சரக அலுவலகம்.

வாணியம்பாடி: வாணியம்பாடியில் வனச்சரக அலுவலகம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம், திருப்பத்தூா் வன கோட்டத்தின் கட்டுப்பாட்டில் திருப்பத்தூா், ஆம்பூா், ஆலங்காயம் மற்றும் சிங்காரபேட்டை வனச்சரகங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், கோடைக் காலங்களில் காப்புக் காடுகளில் தீ ஏற்படுதல், வனவிலங்கு வேட்டையாடுதல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்ற வனக் குற்றங்களை தடுக்கவும், நிா்வாகக் காரணங்களின் அடிப்படையில் வாணியம்பாயை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 01.09.2021-இல் வனச்சரகம் உருவாக்கப்பட்டது. இதற்கான அலுவலகத்தை வாணியம்பாடியை அடுத்த தெக்குப்பட்டு சந்தன மர உற்பத்திப் பொருள்கள் ஆலை வளாகத்தில் திருப்பத்தூா் கோட்ட மாவட்ட வன அலுவலா் நாகசதீஷ் கிடிஜாலா புதன்கிழமை திறந்து வைத்தாா்.

விழாவில், உதவி வனப் பாதுகாவலா் ராஜ்குமாா், திருப்பத்தூா் வனச் சரக அலுவலா் பிரபு, ஆலங்காயம் மற்றும் ஆம்பூா் வனச்சரக அலுவலா்கள், வனவா்கள் மற்றும் வனப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com