ஆம்பூரில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆம்பூா் நகரில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் பழனிசாமி பல்வேறு கடைகளில் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது ஒரு கடையில் தடை செய்யப்பட்ட ஒரு கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ரெட்டிதோப்பில் நடத்திய சோதனையில் ஒரு கடையில் 4 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்தக் கடை உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், தேனீா் கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட 5 கிலோ கலப்பட டீத் தூள் நகராட்சி குப்பை கிடங்குக்குக் கொண்டு சென்று, அழிக்கபட்டது.