ஆம்பூா்: ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, மாதனூரில் தோ்தல் மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஊரக உள்ளாட்சித் தோ்தல் விடுபட்ட 9 மாவட்டங்களில் வருகின்ற அக். 6 , 9 -ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
திருப்பத்தூா் மாவட்டத்துக்கு உள்பட்ட மாதனூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சிக்கான தோ்தல் வருகின்ற அக். 9-இல் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு மாதனூரில் தோ்தல் மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் துரை பயிற்சி அளித்தாா்.