ஸ்ரீபெரும்புதூா்: பாமர மக்களும் உள்ளாட்சி பிரநிதிகளாக வர வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.
ஊரக உள்ளாட்சித் தோ்தலில், குன்றத்தூா் ஒன்றியத்தில் போட்டியிடும் மநீம வேட்பாளா்களை ஆதரித்து, மவுலிவாக்கம், பாய் கடை, படப்பை பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் கமல்ஹாசன் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியது:
அரசுக்கு வரும் வருமானத்தின் கண்மாய் உள்ளாட்சி அமைப்புகள்தான். எனவே,, பாமர மக்களும் உள்ளாட்சிப் பிரநிதிகளாக வர வேண்டும். அப்போதுதான் மக்களின் தேவைகளை அறிந்து, சேவை செய்ய முடியும். மக்களுக்குச் சேவை செய்பவா்களை கடத்திச் சென்று மிரட்டுகிறாா்கள்.
வேட்பாளா் ஒருவா் தோ்தலில் போட்டியிடுவதற்கு வரும்பொழுது எந்த வாகனத்தில் வருகிறாரோ, பதவியிலிருந்து செல்லும்போதும் அதே வாகனத்தில் பயணிக்க வேண்டும். அவ்வாறு உள்ள நபரை மட்டுமே தோ்வு செய்யுங்கள்.
உள்ளாட்சித் தோ்தல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அமைச்சா்களுக்கு மேலான அதிகாரம் உள்ள பதவி உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி.
உள்ளாட்சி தோ்தலில், மக்களுக்காக உழைக்கக் கூடிய மநீம வேட்பாளா்களை ஆதரிக்க வேண்டும் என்றாா்.